மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தக்லைப் என்ற படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இப்படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்த துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்னை காரணமாக வெளியேறி விட்டார். இதனால் அவர் நடிக்க இருந்த வேடத்தில் தெலுங்கு நடிகர் நானி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது சிம்புவிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‛செக்கச் சிவந்த வானம்' என்ற படத்தில் நடித்துள்ள சிம்பு, இந்த ‛தக்லைப்' படத்தில் இணைந்தால் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் அவர் இணையும் படம் இதுவாக இருக்கும். மேலும் சிம்பு நடிக்கும் 48வது படத்தையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.