லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
காதலித்து திருமணம் செய்தவர்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன். இவர்கள் தங்கள் மகன்களுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் இருந்து அன்பாலோ செய்திருந்தார் நயன்தாரா. இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே ஏதோ கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் பிரியப் போகிறார்கள் என்று சோசியல் மீடியாவில் பலரும் கருத்து பதிவிட்டு வந்தார்கள். அதையடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், முக்கியமான ஒன்றை நான் இழந்து விட்டேன் என்று ஒரு பதிவு போட்டிருந்தார் நயன்தாரா. இது மேலும் பரபரப்பு கூட்டும் விதமாக அமைந்தது.
இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனும் மற்றும் தங்களது மகன்களுடன் விமானத்தில் பயணிக்கும் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நயன்தாரா. அதோடு நீண்ட இடைவெளிக்கு பிறகு என்னுடைய பாய்ஸ் களுடன் பயணம் செய்கிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கிடையே கருத்து மோதல் இருப்பதாக பரவி வந்த மொத்த வதந்திகளையும் இந்த ஒரு புகைப்படம் விரட்டி அடித்து விட்டது.