மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அனைத்து தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அது குறித்து வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சனை ஒரு அழிவுகரமான பிரச்சினையாக உள்ளது. இந்தியாவில் உள்ள குழந்தைகள் 28.9 சதவீத பேர் ஏதாவது ஒரு வகையான பாலியல் குற்றங்களுக்கு ஆளாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால் நம்முடைய குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் ஆகியவற்றை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
நம்மைச் சுற்றி இருக்கும் கொடூரமான மனிதர்கள் இடத்திலிருந்து நம்முடைய குழந்தைகளை பாதுகாக்க குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியம். இன்றைக்கு புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால் ஒரு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும்'' என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




