காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

மாமன்னன் படத்திற்கு பின் வாழை என்கிற படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ். அடுத்து துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இதில் கபடி வீரராக துருவ் நடிக்கிறார். இதுதவிர ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் கார்த்தியை வைத்து மாரி செல்வராஜ் புதிய படம் ஒன்று இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவ் விக்ரம் படத்தை இயக்கி முடித்தவுடன் கார்த்தி, மாரி செல்வராஜ் படம் தொடங்கும் என்கிறார்கள்.




