தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மின்னல் முரளி என்கிற திரைப்படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து நடித்த இந்தப்படம் சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது. இயக்குனர் பஷில் ஜோசப் இந்த படத்தை இயக்கி இருந்தார். கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண மனிதர்களுக்கு திடீரென சூப்பர் மேன் பவர் கிடைக்கும்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலையும் அதன் விளைவுகளையும் மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இந்த படத்தை படமாக்கி இருந்தார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு பாலிவுட்டில் இருந்து கூட பலரும் பஷில் ஜோசப்பை பாராட்டினார்கள். இந்த நிலையில் தான் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சக்திமான் என்கிற படத்தை பஷில் ஜோசப் இயக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மின்னல் முரளியாக நடித்த டொவினோ தாமஸும் ஒரு பேட்டியில் சூசகமாக உறுதி செய்துள்ளார். ஆனாலும் இந்த படம் அடுத்த வருடம் தான் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.