மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவின் பெரிய கலை குடும்பம் விஜயகுமாருடையது. அவருக்கு அருண் விஜய் என்ற ஒரே மகன் தான், மற்றவர்கள் அனைவரும் மகள்கள். 5 மகள்களில் கவிதா, வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்க வந்தார்கள். அனிதா நடிக்கவில்லை. அனிதா மருத்துவராக உள்ளார். இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரைத் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு கோகுல் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர். இதில் தியா அம்மா, அப்பாவைப் போன்று மருத்துவராக மருத்துவம் படித்து வருகிறார்.
தியாவுக்கு தற்போது திருமணம் நடக்க இருக்கிறது. திலன் என்பவரைத் திருமணம் செய்யப் போகிறார் தியா. கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் வெளிநாட்டில் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் விஜயகுமார் மகள்கள் அனிதா, கவிதா, மருமகள் ஆர்த்தி, பேரன் கோகுலுடன் திரைப்பட முன்னணியினருக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகிறார். முதல் அழைப்பாக தனது நண்பரும், சக நடிகருமான ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.