மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் புதிய அவதாரம் எடுத்துள்ள வனிதா விஜயகுமார் பொறுப்பான பல விஷயங்களில் பயணித்து வருகிறார். சினிமா ஆக்டிங், பிசினஸ் என அனைத்திலும் மிகவும் பாசிட்டாவாக செயல்பட்டு வருகிறார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் தனது மகள் சினிமா துறைக்கு வருவதை குறித்து பேசியுள்ள வனிதா, 'ஜோவிகாவை நான் நடிகையாக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நானே சினிமாவை விட்டு வெளியேவந்தவள் தான். நான் எப்படி அவளை அதில் தள்ளுவேன். நடிக்க வேண்டும் என்பது அவளது விருப்பம். அதற்கு ஒரு தாயாக துணை நிற்பது என் கடமை என்று கூறியுள்ளார்'.
மேலும், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அவர், 'நான் எந்த ஒரு விஷயத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. கமாவில் தான் வாழ்கை தொடர்கிறது. புள்ளி என்றால் அது முடிவு. எனவே, மீண்டும் நான் கல்யாணமே பண்ண மாட்டேன் என்று சொல்லமாட்டேன்' என கூறியுள்ளார்.