‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? |
சென்னை : வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது அனுமதியின்றி ‛சிவராத்திரி...' பாடலை பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இப்போது வரும் புதிய படங்களின் பாடல்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ... பழைய படங்களின் பாடல்களை பயன்படுத்தி வரவேற்பை பெற்று வருகின்றனர். சமீபகாலமாக இந்த போக்கு அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளும், வழக்கு பாய்வதும் தொடர்கிறது.
‛எனது அனுமதியின்றி எனது பாடல்களை பயன்படுத்தியதாக' சில படங்களுக்கு நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக மலையாள படமான ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற ‛கண்மணி அன்போடு காதலன்...' பாடல், அஜித் நடித்த ‛குட் பேட் அக்லி' படத்தில் இடம்பெற்ற ‛ஒத்தரூபா தாரேன்...' பாடல் உள்ளிட்டவைகளுக்காக படக்குழு மீது நஷ்டஈடு கேட்டு இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து அவர் நாயகியாகவும் நடித்துள்ள படம் ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இதை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தப்படம், இன்று(ஜூலை 11) ரிலீஸாகி உள்ளது.
இதில் கமல் நடிப்பில் சிங்கீதம் சீனிவாசன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளியான ‛மைக்கேல் மதன காமராசன்'படத்திலிருந்து ‛சிவராத்திரி...' என்ற பாடலை பயன்படுத்தி உள்ளனர். இந்த படாலை தனது அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவினர் இளையராஜாவிற்கு நன்றி கார்டு போட்டுள்ளனர். மேலும் பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தியதாக வனிதா தரப்பில் தெரிவிக்கின்றனர்.