கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவில் ஒரு படம் கூட இசையமைத்து வெளிவராத ஒரு இசையமைப்பாளருக்கு அடுத்தடுத்து புதிய படங்கள் ஒப்பந்தமாவது திரையுலகினரை மட்டுமல்ல ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.
'கட்சி சேரா, ஆச கூட' இரண்டு ஆல்பங்கள் மூலம் இளைஞர்கள் மனதை சட்டெனக் கவர்ந்தவர் சாய் அபயங்கர். அவரை முதன் முதலில் தான் வழங்கும் 'பென்ஸ்' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் லோகேஷ் கனகராஜ். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் அந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். அதற்கடுத்து 'டூட், கருப்பு, சிம்பு 49, அல்லு அர்ஜுன் 22, 'பல்டி' மலையாளப் படம் என அடுத்தடுத்து ஒப்பந்தமானார்.
நேற்று பூஜை நடந்த கார்த்தி நடிக்கும் 'மார்ஷல்' படத்திற்கும் தற்போது இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார். இவை தவிர சிவகார்த்திகேயனின் 24வது படத்திற்கும் அவர்தான் இசையமைக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவை தவிர மேலும் சில படங்களுக்கு இசையமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல். இத்தனை படங்களையும் அவர் எப்படி சமாளித்து பாடல்களை வழங்கப் போகிறார் என ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.