டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகை பூனம் பாண்டே நேற்று முன்தினம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டதாக அவருடைய மேலாளர் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியிட்டு இருந்தார். ஆனால் நேற்று நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் உயிருடன் இருப்பதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே அப்படி செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டவர், நான் வெளியிட்ட அந்த செய்தி யார் மனதையாவது பாதித்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார் .
அவருடைய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரு நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சிப்பது ஒரு கீழ்த்தரமான செயல் என்று நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அதோடு கடந்த 2000ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு சட்டப்படி, சோசியல் மீடியாவில் பொய்யான தகவலை பரப்பினால் மூன்றாண்டு சிறை தண்டனையும், மீண்டும் அதே தவறை செய்தால் ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதோடு அவர்களுக்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்படி ஒரு பொய் செய்தியை பரப்பிய நடிகை பூனம் பாண்டேவுக்கு மூன்று சிறை தண்டனை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.