அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதுதவிர வாடிவாசல் படமும் அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் ஹிந்தியில் மகாபாரதத்தை தழுவி கர்ணன் கதையை வைத்து பிரமாண்ட படம் உருவாக உள்ளது. இதை ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்க உள்ளார். இதில் கர்ணன் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு 'கர்ணா' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. தற்போது படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்த படம் தொடர்பாக ஏற்கனவே சூர்யாவும், ராகேஷ் ஓம் பிரகாஷூம் சந்தித்து பேசிய குறிப்பிடத்தக்கது.