25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்று தற்போது பாலிவுட் வரை தனது எல்லையை விரிவு படுத்திவிட்டார். அதிலும் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் இன்னும் மிகப்பெரிய அளவில் ராஷ்மிகாவை பாலிவுட் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விட்டது. அதுமட்டுமல்ல மும்பை மீடியாக்களிடமும் எந்தவித பந்தாவும் இன்றி பழகி வருகிறார். குறிப்பாக புகைப்பட கலைஞர்களின் செல்லப் பிள்ளையாகவே ஆகிவிட்டார் ராஷ்மிகா.
இந்த வகையில் சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்தார் ராஷ்மிகா. அந்த நேரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில் பயணிக்க வருகை தந்தார். அப்போது கல்யாணியையும் தன்னுடன் சேர்த்து அணைத்தபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடி நடந்தார் ராஷ்மிகா.
அப்போது கல்யாணி யார் என அவர்கள் கேட்க 'இது கல்யாணி பா' என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஷ்மிகா. இருவரும் ஒன்றாக நடந்து வந்தபோது ஒரு கட்டத்தில் கல்யாணியின் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சித்தார் ராஷ்மிகா. ஆனால் கல்யாணியோ என் பின்னாடி ஒளிய வேண்டாம். என்னை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று சங்கோஜத்துடன் ராஷ்மிகாவிடம் கூறினார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.