மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகை ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய அளவில் புகழ் பெற்று தற்போது பாலிவுட் வரை தனது எல்லையை விரிவு படுத்திவிட்டார். அதிலும் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படம் இன்னும் மிகப்பெரிய அளவில் ராஷ்மிகாவை பாலிவுட் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து விட்டது. அதுமட்டுமல்ல மும்பை மீடியாக்களிடமும் எந்தவித பந்தாவும் இன்றி பழகி வருகிறார். குறிப்பாக புகைப்பட கலைஞர்களின் செல்லப் பிள்ளையாகவே ஆகிவிட்டார் ராஷ்மிகா.
இந்த வகையில் சமீபத்தில் மும்பை ஏர்போர்ட்டுக்கு வந்தார் ராஷ்மிகா. அந்த நேரத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் அதே விமானத்தில் பயணிக்க வருகை தந்தார். அப்போது கல்யாணியையும் தன்னுடன் சேர்த்து அணைத்தபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தபடி நடந்தார் ராஷ்மிகா.
அப்போது கல்யாணி யார் என அவர்கள் கேட்க 'இது கல்யாணி பா' என்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் ராஷ்மிகா. இருவரும் ஒன்றாக நடந்து வந்தபோது ஒரு கட்டத்தில் கல்யாணியின் பின்னால் ஒளிந்து கொள்ள முயற்சித்தார் ராஷ்மிகா. ஆனால் கல்யாணியோ என் பின்னாடி ஒளிய வேண்டாம். என்னை மறைத்துக் கொள்ளுங்கள்” என்று சங்கோஜத்துடன் ராஷ்மிகாவிடம் கூறினார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.