இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகரான மோகன்பாபு இன்று இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இருவரும் நெருக்கமான நண்பர்கள்.
கடந்த வாரம் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவால் திடீர் மரணம் அடைந்தார். அது திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கிலும் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்துள்ளார். இருந்தாலும் அவர்கள் சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு இரங்கலையும் தெரிவிக்கவில்லை.
நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு மட்டும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோகன்பாபு, அவரது மனைவியுடன் இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். “அதிர்ச்சியாக இருந்தது. இதயம் உடைந்த தகவலைக் கேட்டபின் இளையராஜா அவர்களை சந்தித்து அவரது மகள் பவதாரிணி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தெரிவித்தேன். அவரது குடும்பத்தாருக்கு கடவுள் சக்தியைக் கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.