கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

லொல்லு சபா ராம்பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து காமெடி கலந்த பேய் படமாக வெளிவந்த தில்லுக்கு துட்டு படம் இரண்டு பாகங்களாக வெளியானது. சமீபத்தில் தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' என பெயரில் வெளியானது. இந்த படத்தை ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நிகழ்ச்சியில் சந்தானம் கூறியதாவது, "டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தை ஆர்யா தயாரிக்கின்றார்" என மேடையில் அறிவித்துள்ளார்.




