லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
முன்னணி நடிகர், நடிகைகளின் பெயரில் போலியாக எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் கணக்குள் தொடங்கி, சினிமா வாய்ப்பு தருகிறோம். என்னை நீங்கள் சந்திக்கலாம். நான் நடத்தும் அறக்கட்டளைக்கு உதவுங்கள் என்கிற ரீதியில் பதிவுகள் வெளியிட்டு பல மோசடிகள் நடந்து வருகிறது. இதுபற்றி அறியாத அப்பாவி மக்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகர், நடிகை பணம் கேட்கிறாரே என்று பணத்தை அனுப்பி விடுகிறார்கள்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலனின் பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில் “எனது பெயரில் மர்ம நபர் வாட்ஸ் ஆப் மூலம் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். வாட்ஸ் ஆப்பில் எனது புகைப்படத்தை டி.பி.யில் வைத்துக்கொண்டு நான்தான் வித்யாபாலன் என்று கூறி மோசடி வேலையில் ஈடுபட்டு வருவதாக எனக்கு தெரிய வந்துள்ளது. எனவே அது போன்ற நபர்களிடமிருந்து அழைப்பு அல்லது மெசேஜ் வந்தால் அதற்கு பதிலளிக்க வேண்டாம்'' என்று பதிவிட்டுள்ளார்.