'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த ‛படை தலைவன்' படத்தில் அவருக்கு ஹீரோயின் இல்லை. யானையை தேடி செல்லும் கதை என்பதால் ஹீரோயின் தேவையில்லை என நினைத்து விட்டார் இயக்குனர். சரி, அடுத்து என்ன படத்தில் நடிக்குறீங்க அதில் ஹீரோயின் உண்டா என்றால் சண்முகபாண்டியன் சிரிக்கிறார்.
‛‛அடுத்து பொன்ராம் இயக்கும் கொம்பு சீவி படத்தில் நடிக்கிறேன். அது அவர் ஸ்டைல் பக்கா கமர்ஷியல் கதை. காதல், காமெடி இருக்கிறது. ஹீரோயினும் இருக்கிறார்'' என்கிறார். அந்த படம் 1990களில் நடக்கும் கதையாம். அதில் ஹீரோயினாக தர்ணிகா நடிக்கிறார். அவருக்கு போலீஸ் கேரக்டர் என்று கூறப்படுகிறது. இவர் முன்னாள் நடிகை ஒருவரின் மகள் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த படத்தில் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் வருகிறார். ஒரு உண்மை சம்பவத்தை தழுவி இந்த கதையை எடுக்கிறாராம் பொன்ராம். 10 ஆண்டுகளுக்கு முன்பு ‛சகாப்தம்' என்ற படத்தில் நடித்தார் சண்முகபாண்டியன். அதில் ஹீரோயினாக நேஹா நடித்தார். அவர் எப்படி இருப்பார் என்பதையே தமிழ் சினிமா மறந்துவிட்டது.