மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
பாரத பிரதமர் நரேந்திர மோடி லட்சத் தீவிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். அந்த வீடியோ, போட்டோ சமீபத்தில் வெளியானது. இதனை மாலத்தீவு அமைச்சர்கள், எம்.பிக்கள் விமர்சனம் செய்தனர். பிரதமரை அவதூறு செய்து கருத்துக்களை வெளியிட்டனர். இதற்கு இந்தியாவில் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று வலைத்தளத்தில் பலர் வற்புறுத்தினர். இதையடுத்து இந்தியர்கள் மாலத்தீவு செல்வதையும், அங்கு ஓட்டல்களில் முன்பதிவு செய்து இருந்ததையும் ரத்து செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனாவும் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் பிக்பாஸ் மற்றும் படப்பிடிப்புகளில் தொடர்ந்து பிசியாக இருந்ததால் குடும்பத்துடன் ஓய்வு எடுக்க மாலத்தீவு செல்ல இருந்தேன். தற்போது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துவிட்டேன். பயத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதை செய்யவில்லை. நமது பிரதமரை அவர்கள் தவறாக பேசியதை ஏற்க முடியாது. இதற்கான பின் விளைவுகளை மாலத்தீவு சந்தித்து வருகிறது. இதனாலேயே நானும் பயணத்தை ரத்து செய்தேன். மாலத்தீவுக்கு பதிலாக லட்சத்தீவு செல்ல இருக்கிறேன்'' என்றார்.