புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் என்கிற இரட்டையர்கள் காமெடி மிகப்பெரிய அளவில் எண்பது 90களில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. அதன்பிறகு அப்படி ஒரு இரட்டையர் கூட்டணியை அடுத்து வந்த நகைச்சுவை நடிகர்களால் ஏற்படுத்த முடியவில்லை. அதே சமயம் கதாநாயகனாக நடித்து வந்த பார்த்திபனும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் பாரதி கண்ணம்மா படத்தில் முதன் முதலாக இணைந்து அதேபோன்ற ஒரு இரட்டையர் காமெடி கூட்டணியை உருவாக்கினர்.
பார்த்திபன் மூலம் வடிவேலுக்கு உருவாகும் சிக்கல்கள் தான் இவர்களது காமெடியின் அடிநாதம். இதைத்தொடர்ந்து வந்த வெற்றி கொடி கட்டு, உன்னருகே நானிருந்தால் உள்ளிட்ட பல படங்களில் இவர்களது காமெடி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. ஆனால் ஒரு காலகட்டத்தில் வடிவேலு சோலோ காமெடியனாகவும் கதாநாயகனாகவும் வளர்ந்தார். அதன் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் மீண்டும் தங்களது கூட்டணி இணைவதற்கான வாய்ப்பு விரைவில் இருக்கலாம் என்று சூசகமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், அங்கே வடிவேலுவுடன் இணைந்த எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ,"நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்! இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்.." என்று கூறியுள்ளார்.