பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடைபெற இருக்கும் 96வது ஆஸ்கர் விருது போட்டிகளில் கலந்துகொள்ள இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற '2018' என்கிற படம் அதிகாரப்பூர்வமாக நாமினேட் செய்யப்பட்டிருந்தது. இந்த படம் நிச்சயம் ஆஸ்கர் போட்டியிலும் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இறுதிப்பட்டியலில் இருந்து வெளியேறி ஆஸ்கர் விருது பெரும் வாய்ப்பை இழந்துள்ளது. இது மலையாள ரசிகர்களுக்கு மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் அமைந்துள்ளது.
2018ல் கேரளாவையே புரட்டிப்போட்ட பெரும் மழை வெள்ளத்தையும் அதன் பாதிப்பையும் அதில் நடைபெற்ற மீட்பு பணிகளையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.. டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், வினீத் சீனிவாசன், நரேன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் வெறும் கலைப்படமாக மட்டுமல்லாமல் கமர்சியல் படமாகவும் அமைந்து கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியது. மலையாளத் திரையில் இருந்து ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொள்ள தேர்வான நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.