பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாள திரையுலக நடிகர் சங்கம் 'அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி அதன் காரணமாக நடிகர் சங்கத்தைச் சேர்ந்த பலர் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகினர். அதற்கு தார்மீக பொறுப்பேற்ற சங்க தலைவரான மோகன்லால், நிர்வாகிகள் பலரோடு ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து தற்போது வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனன் மற்றும் வில்லன் நடிகர் தேவன் என இருவர் போட்டியில் இருக்கின்றனர். இதில் மோகன்லால், மம்முட்டி ஆதரவு பெற்ற ஸ்வேதா மேனன் தலைவராக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மற்ற பொறுப்புகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.. ஆச்சரியமாக இதில் இணை செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் நடிகை அன்சிபா ஹாசன். இவர் திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த பல வருட காலமாகவே நடிகர் சங்க செயல்பாடுகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் அன்சிபா ஹாசன். அந்த வகையில் தேர்தல் நடப்பதற்கு முன்பே இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மலையாள திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.