ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
பாகுபலி படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் மிகப்பெரிய ஹீரோ ஆகிவிட்டார். தென்னிந்தியாவுக்கு சமமாக பாலிவுட்டிலும் இவரது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் அவர் எப்போதும் போல அதே எளிமையுடன் தான் சக நட்சத்திரங்களை அணுகுகிறார் என்றும் விருந்தோம்பலில் எல்லோரையும் அசத்தி விடுகிறார் என்றும் அவ்வப்போது பலரும் சொல்வதுண்டு. அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சலார் படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.
பிரபாஸிடம் உள்ள உங்களை ஸ்தம்பிக்க வைக்கும் குணாதிசயம் எது என்று பிரித்திவிராஜிடம் கேட்டபோது அவருடைய விருந்தோம்பல் தான் என்று கூறியுள்ளார். ஒருமுறை பிரித்விராஜ் எனது குடும்பத்திற்கு ஹோட்டலில் விருந்தளித்தார். அப்போது எங்களுக்காக அவர் வரவழைத்த உணவு வகைகளை அடுக்கி வைக்கவே ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டது. என்னுடைய 7 வயது மகள் கூட பிரபாஸை பார்த்து எங்கள் மூவருக்கே இவ்வளவு என்றால் எங்களுடன் எங்களது மாமா அத்தைகள் கூட வந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அந்த அளவுக்கு பிரபாஸ் நம்மை திக்குமுக்காட வைத்து விடுவார்” என்று கூறியுள்ளார்.