தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக மக்களுக்கு மறக்க முடியாத ஒரு மாதமாக அமைந்துவிட்டது. மாதத்தின் துவக்கத்தில் சென்னையில் பெரு மழை ஏற்பட்டு வெள்ளம் வந்தது. அதனால் அப்போது வெளியான படங்களுக்கு வசூலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தியேட்டர்களை மூடும் சூழல் உருவானது. அதன் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் அதிகமாக வரவில்லை.
இந்நிலையில் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்த படங்களும் குறிப்பிடும்படி வசூலைத் தரவில்லை. கடந்த வாரம் வெளியான படங்களில் 'பைட் கிளப்' படம் மட்டும் 5 கோடியே 75 லட்சம் வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் கடந்த ஞாயிறன்று தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை ஏற்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக அப்பகுதிகளில் தியேட்டர்களை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்ட மக்கள் இன்னும் படங்களைப் பார்க்கும் மனநிலைக்கு வராத நிலையில், தென் மாவட்டங்களிலும் வெள்ளத் தாக்கம் இருப்பதால் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களுக்கும் அதே சிக்கல் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'சலார்' உள்ளிட்ட படங்களைக் கூட வாங்கி வெளியிட யோசிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த டிசம்பர் மாதம் திரையுலகிற்கு சொல்லிக் கொள்ளும்படி அமையாது என்று திரையுலகினர் வருத்தத்தில் இருக்கிறார்கள்.