மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா(70) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான பேச்சு வழக்கு உள்ளது. அந்தவகையில் நெல்லை தமிழில் பேசி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் நெல்லை சிவா. இவரது இயர் பெயர் சிவநாதன் சண்முகவேல் ராமமூர்த்தி. 1952ம் ஆண்டு ஜன., 16ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே உள்ள பணகுடியில் சிறுகிராமத்தில் பிறந்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடினார். ஆரம்பத்தில் நாடகங்களிலும், டிவிக்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தார்.
சொந்த ஊரான நெல்லை மாவட்டம் பணகுடியில் வசித்து வந்த நெல்லை சிவா இன்று(மே 11) மாலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது இறுதிசடங்கு நாளை நண்பகலில் அவரது சொந்த ஊரிலேயே நடக்கிறது. நெல்லை சிவா திருமணமே செய்யாதவர் ஆவார்.
நடிகர்கள் விவேக், பாண்டு என அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மறைந்து வருவது திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.