மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தண்ணீரில் தத்துளித்துக் கொண்டு வருகிறார்கள். இன்னும் கூட பல பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி. அரசை குறை கூறுவது அல்ல. அரசு இயந்திரம் என்பது ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுநர்களுடன் இணைந்து திட்டங்கள் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛தட் படுத்தே விட்டானய்யா மொமண்ட். மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமை இல்லையா. யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரச்சாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது'' என்று குறிப்பிட்டுள்ளார்.