பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் தண்ணீரில் தத்துளித்துக் கொண்டு வருகிறார்கள். இன்னும் கூட பல பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ‛‛மக்களுக்கு என்ன செய்வது என்பது தான் தற்போதைய பணி. அரசை குறை கூறுவது அல்ல. அரசு இயந்திரம் என்பது ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை. எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுநர்களுடன் இணைந்து திட்டங்கள் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‛‛தட் படுத்தே விட்டானய்யா மொமண்ட். மக்களுக்கு தம் அவதியை வெளியிட உரிமை இல்லையா. யாரும் வேண்டுமென்றே குறை சொல்ல விரும்பவில்லை. நன்றி சொல்லவே விரும்புவார்கள். அரசின் விளம்பர பிரச்சாரம் அளவிற்கு செயல்பாடு இருந்தால் நன்றி சொல்லவும் சென்னை தயங்காது'' என்று குறிப்பிட்டுள்ளார்.




