பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு |

சென்னை : தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி, சுதந்திர தினமான இன்று பாஜவில் இணைந்தார்.
'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி சினிமாவில் நடித்து வருவதோடு, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதில் சில சர்ச்சைகளில் சிக்கி சிறையும் சென்றார்.
இந்நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கஸ்தூரி பாஜவில் இணைந்தார். அவருடன் பிக்பாஸ் பிரபலமும், சமூக செயற்பாட்டாளருமான நமீதா மாரிமுத்துவும் பாஜவில் இணைந்தார். இருவரையும் பாஜவுக்கு வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.