என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

'ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. பல்வேறு நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். 51 வயதான நடிகை கஸ்தூரி, சமூக பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
எந்த அரசியல் கட்சிகளையும் சாராமல், சமூக வலைதளங்களின் மூலம் மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்த நிலையில், சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில், நடிகை கஸ்தூரி இன்று பா.ஜ.,வில் இணைந்தார்.
பா.ஜ.,வில் இணைந்தது தொடர்பாக அவரிடம் தொடர்புகொண்டபோது, ‛‛திமுக.,வினர் என்னை ‛சங்கி.. சங்கி..' என நான்கு வருடமாக சொல்லி சொல்லி ஏற்கனவே என்னை பா.ஜ.,வில் சேர்த்துவிட்டனர். திமுக.,வினர் என்னை இழிவுப்படுத்த வேண்டும் என நினைத்து அப்படி சொன்னார்கள். ஆனால், சமீபத்தில் நடந்த பல சமூக விஷயங்களில் திமுக அரசின் பாராமுகத்தை பார்த்து கட்சி அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் பா.ஜ.,வில் சேர்ந்ததற்கான முழு ‛கிரெடிட்'ம் திமுக.,வுக்கு தான் கொடுக்க வேண்டும். நான் ஏற்கனவே மக்கள் பணிகளை செய்து வருகிறேன். அதனை தொடர்ந்து செய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளனர். வேறு எந்த பணம், பதவியையும் எதிர்பார்த்து நான் கட்சியில் சேரவில்லை'' எனக் கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.