இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தின் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் சிம்பு. இந்த படத்திற்காக தீவிர ஒர்க்கவுட்டில் இறங்கி தனது பாடி லாங்குவேஜ் பக்காவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ஜனவரி மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிப்பதற்கு சிம்பு முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே வல்லவன் என்ற படத்தை இயக்கி நடித்துள்ள சிம்பு, மன்மதன் படத்தில் ஸ்க்ரிப்ட் ரைட்டராகவும் பணியாற்றி இருந்தார்.
நடிகர் தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை தற்போது இயக்கி நடித்துவரும் நிலையில் சிம்புவும் அதே பாணியில் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.