இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த பல வருடங்களாகவே உடல்நலமின்றி இருக்கிறார். கடந்த 18ம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான சிகிச்சை பெற்று வருவதாக விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர் சிகிச்சை காரணமாக விஜயகாந்த் பற்றி தவறான வதந்திகள் பரவி வந்தது. இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜயகாந்த், காய்ச்சல் காரணமாக கடந்த 18ம் தேதி மியாட்-ல் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி, தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.