மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த பல வருடங்களாகவே உடல்நலமின்றி இருக்கிறார். கடந்த 18ம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 6 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான சிகிச்சை பெற்று வருவதாக விஜயகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தொடர் சிகிச்சை காரணமாக விஜயகாந்த் பற்றி தவறான வதந்திகள் பரவி வந்தது. இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஜயகாந்த், காய்ச்சல் காரணமாக கடந்த 18ம் தேதி மியாட்-ல் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகளும் நிலையாக உள்ளது. இன்னும் சில நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு அவர் வீடு திரும்பி, தனது வழக்கமான நடவடிக்கைகளை தொடங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.