மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து ஒருவழியாக நாளை(நவ., 24) வெளிவருவதாக ஒரு மாதத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் படம் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சிம்புவை வைத்து ஒரு படம் இயக்குவதாக கூறி ஒப்பந்தம் போட்டு முன் பணமாக ரூ.2.40 கோடி பெற்றுள்ளார் கவுதம் மேனன். ஆனால் படத்தை எடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் இந்நிறுவனம் கவுதம் மேனன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. தங்களுக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க கோரிக்கை வைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கவுதம் மேனன் தரப்பில் ஆஜரான வக்கீல் பணத்தை திருப்பி தராமல் படத்தை வெளியிட மாட்டோம் என உறுதி அளித்தார். இதையடுத்து, நாளை காலை 10:30 மணிக்குள் 2 கோடி ரூபாயை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் திருப்பித்தர வேண்டும், இல்லையெனில் படத்தை வெளியிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.