திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இது போன்ற வீடியோக்களை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அந்த டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறை இறங்கி உள்ள நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதற்கு டில்லி இணையதள குற்ற காவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், ‛இந்த டீப் பேக் வீடியோ சம்பந்தமாக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், மெட்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து இதை கண்டறியும் தகவல்கள் பெறப்பட்டு தொழில்நுட்ப ஆய்வு நடைபெற்று வருவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.