லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இது போன்ற வீடியோக்களை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அந்த டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறை இறங்கி உள்ள நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதற்கு டில்லி இணையதள குற்ற காவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், ‛இந்த டீப் பேக் வீடியோ சம்பந்தமாக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், மெட்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து இதை கண்டறியும் தகவல்கள் பெறப்பட்டு தொழில்நுட்ப ஆய்வு நடைபெற்று வருவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.