இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த சில வருடங்களாக இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு இப்படம் படமாகி வருகிறது. அடுத்த ஆண்டு இப்படம் எப்படியும் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராம் சரண் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக படத்தின் முதல் சிங்கிளான 'ஜரகண்டி' பாடலை தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது அதைத் தள்ளி வைக்கிறோம் என அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இருவேறு நிறுவனங்களின் 'டாகுமென்டேஷன்' காரணமாக, தவிர்க்க முடியாத காரணங்களால் 'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் வெளியீட்டைத் தள்ளி வைக்கிறோம். வேறொரு நாளில் இது குறித்த அப்டேட்டுன் மீண்டும் வருகிறோம். ராம் சரண் ரசிகர்களின், ஷங்கர் ரசிகர்களின் காத்திருப்புக்கு இது மதிப்பானது. 'கேம் சேஞ்சர்' குறித்து வர உள்ள ஒவ்வொன்றும் சிறப்பானவை. உங்களை மகிழ்விக்க நிகரற்ற தரத்துடன் நான் ஸ்டாப் ஆக குழுவினர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தத் தள்ளி வைப்பு ராம் சரண் ரசிகர்களை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. 'ஜரகண்டி' பாடலுடன் தீபாவளியைக் கொண்டாடலாம் எனக் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். 'ஜரகண்டி' எனப் பெயர் வைத்துவிட்டு தாமதம் செய்கிறார்களே என கோபமடைந்துள்ளார்கள்.