மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை தயாரித்தது. அடுத்த படமாக 'கொரோனா குமார்' என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 9.5 கோடி ரூபாய் சம்பளம் பேசி, முன்பணமாக 4.5 கோடி ரூபாய் கொடுத்து, சிம்புவுடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் படம் தொடங்கப்படவில்லை. மற்ற படங்களில் சிம்பு நடித்து வந்தார். இதனால் கொரோனா குமார் படத்தில் நடித்துவிட்டுத்தான் சிம்பு வேறு படங்களில் நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் முன்பணத்தை திருப்பி தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில் ஒப்பந்தத்தில் ஒரு கோடி முன்பணம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருப்பதால் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள 1 கோடிக்கான உத்தரவாதத்தை நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிம்பு தரப்பில் ஒரு கோடி செலுத்திய ரசீது ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் கூறியிருப்பதாவது: இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய, மூத்த வக்கீல் என்.எல்.ராஜா மத்தியஸ்தராக நியமிக்கப்படுகிறார். சிம்பு கொடுத்துள்ள 1 கோடிக்கான உத்தரவாதம் 2 மாதங்களுக்கு மட்டுமே செல்லும். அதற்குள் இருதரப்பும் பேசி முடிவுக்கு வரவேண்டும். 'கொரோனா குமார்' படத்தில் நடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரர் கோரிக்கை ஏற்க முடியாது. வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று சிம்புவுக்கு தடை விதித்தால், அது அவரது தொழிலுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்துவதாகிவிடும். மேலும், இந்த பிரச்சினையை சட்டப்படி இரு தரப்பினரும் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.