பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கலந்த அரசியல் படமாக வெளியாகி கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என அப்போதே பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணி அறிவித்தனர். அதன்பிறகு சில வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் லூசிபர் 2 எம்புரான் என்கிற பெயரில் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள்.
கடந்த சில வாரங்களாக லடாக் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மோகன்லால் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் லடாக்கில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளதாக பிரித்விராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். லூசிபரை தொடர்ந்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றியை கொடுத்த பிரித்விராஜ் இந்த எம்புரான் படம் மூலமாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்துவிடும் முனைப்புடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.