புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமான லூசிபர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் ஒரு கேங்ஸ்டர் கலந்த அரசியல் படமாக வெளியாகி கிட்டத்தட்ட நூறு கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என அப்போதே பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணி அறிவித்தனர். அதன்பிறகு சில வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் லூசிபர் 2 எம்புரான் என்கிற பெயரில் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து படப்பிடிப்பையும் துவங்கினார்கள்.
கடந்த சில வாரங்களாக லடாக் பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. மோகன்லால் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் லடாக்கில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளதாக பிரித்விராஜ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். லூசிபரை தொடர்ந்து ப்ரோ டாடி என்கிற படத்தையும் மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றியை கொடுத்த பிரித்விராஜ் இந்த எம்புரான் படம் மூலமாக ஹாட்ரிக் வெற்றியை ருசித்துவிடும் முனைப்புடன் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.