நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்கள் வரும் போதும், பெரிய படங்கள் வெளியாகும் போது ஒரு வாரம் முன்பாகவே ஒரு பெரும் இடைவெளி விழுந்துவிடும். சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் கூட படத்தை வெளியிட்டு 'ரிஸ்க்' எடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு இடைவெளி இப்போது வந்துள்ளது.
அடுத்த வாரம் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் அப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், அக்டோபர் 20ம் தேதி 'மார்கழித் திங்கள்' படமும், தெலுங்கு டப்பிங் படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படமும் இங்கு வெளியாக உள்ளது. அந்தப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
எப்படியாவது படத்தை வெளியிட்டால் போதும் என இன்று சில தமிழ்ப் படங்களை வெளியிட்டுள்ளார்கள். “அக்கு, குண்டான்சட்டி, மயிலாஞ்சி, புது வேதம்” ஆகிய படங்கள் இன்று வெளியாகி உள்ளன. கடந்த வாரமும் அதற்கு முன்பும் வெளியான படங்களின் ஓட்டம் ஒரு வாரத்திற்கு மேல் தாங்கவில்லை என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லியோ' படமாகவே இருந்தாலும் அதிக பட்சம் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. மற்ற படங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. இரண்டாவது வார போஸ்டர் என்பதெல்லாம் வெற்றுப் பெருமைக்காக வெளியிடப்படுபவைதான் என்கிறார்கள்.