டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்கள் வரும் போதும், பெரிய படங்கள் வெளியாகும் போது ஒரு வாரம் முன்பாகவே ஒரு பெரும் இடைவெளி விழுந்துவிடும். சிறிய பட்ஜெட் படமாக இருந்தால் கூட படத்தை வெளியிட்டு 'ரிஸ்க்' எடுக்க மாட்டார்கள். அப்படி ஒரு இடைவெளி இப்போது வந்துள்ளது.
அடுத்த வாரம் அக்டோபர் 19ம் தேதி விஜய் நடித்துள்ள 'லியோ' படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்துத் தியேட்டர்களிலும் அப்படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், அக்டோபர் 20ம் தேதி 'மார்கழித் திங்கள்' படமும், தெலுங்கு டப்பிங் படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படமும் இங்கு வெளியாக உள்ளது. அந்தப் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
எப்படியாவது படத்தை வெளியிட்டால் போதும் என இன்று சில தமிழ்ப் படங்களை வெளியிட்டுள்ளார்கள். “அக்கு, குண்டான்சட்டி, மயிலாஞ்சி, புது வேதம்” ஆகிய படங்கள் இன்று வெளியாகி உள்ளன. கடந்த வாரமும் அதற்கு முன்பும் வெளியான படங்களின் ஓட்டம் ஒரு வாரத்திற்கு மேல் தாங்கவில்லை என்றே திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'லியோ' படமாகவே இருந்தாலும் அதிக பட்சம் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. மற்ற படங்கள் ஓரிரு நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்கின்றன. இரண்டாவது வார போஸ்டர் என்பதெல்லாம் வெற்றுப் பெருமைக்காக வெளியிடப்படுபவைதான் என்கிறார்கள்.




