கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. அது குறித்த டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் திடீரென்று லியோ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார், லியோ படத்தின் இசை விழா ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு சமீபத்தில் ஏ. ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்டது போன்ற குளறுபடி ஏற்பட்டு விடக்கூடாது மற்றும் அரசியல் அழுத்தம் போன்ற காரணங்கள் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்த நேரத்தில் லியோ படத்தின் ஆடியோ விழா ரத்தானதால் விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரிய கொந்தளிப்புக்கு ஆளாகி உள்ளார்கள். இதற்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்தபோதும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. லியோ ஆடியோ விழா ரத்தானதின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவே கருதுகிறார்கள். அதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தை சேர்ந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள். அதில், ‛ஆடியோ லான்ச் இல்லைன்னா என்ன, ஆட்சிய புடிச்சிட்டா போச்சி' என்ற வாசகங்களுடன் போஸ்டரை வெளியிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.