பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கடந்த சில வருடங்களில் வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் வரவேற்பை பெறாததால் துவண்டு போய் இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால்சலாம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனாலும் ரசிகர்கள் அடுத்ததாக எதிர்பார்ப்பது ரஜினியின் 170 மற்றும் 171வது படங்களைத் தான்.
அந்த வகையில் ரஜினியின் 170வது படத்தை ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படம் என்கவுன்டர் பற்றியும் அதன் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றியும் பேசும் படமாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக தான் நடிக்கிறார் என்றும் இந்த படத்தின் கதையும் கதைக்களமும் கன்னியாகுமரி பின்னணியில் நிகழ்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரி பாஷையிலேயே படம் முழுக்க பேசுகிறார் என்றும் அதற்காக சிறப்பு பயிற்சி எடுக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதுநாள் வரை ரஜினிகாந்த் நடித்த படங்களில் அவர் பேசும் வசனங்கள் விதவிதமான மாடுலேஷனில் இருந்தாலும் ஒரே விதமான தமிழ் பாஷையிலேயே இருந்து வந்தது. குறிப்பாக படு ஸ்பீடாக பேசக்கூடிய ரஜினிகாந்த் இந்த கன்னியாகுமரி பாஷையை எப்படி தனது பாணியில் பேசப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்..