அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'இந்தியன் 2' படம் கடந்த வருடம் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் ஷங்கர் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' தெலுங்குப் படமும், கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'தக் லைப்' படமும் வெளிவந்து அவையும் பெரிய தோல்வியைத் தழுவியது. இதனால், 'இந்தியன் 3' படம் மீண்டும் உருவாவதில் சிக்கல் என நாம் கூட ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனிடையே, கடந்த வாரம் நடைபெற்ற புத்தக விழா ஒன்றில் கலந்து கொண்ட ஷங்கர், ரஜினிகாந்த் மனம் விட்டுப் பேசியுள்ளனர். அப்போது 'இந்தியன் 3' குறித்த தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார் ஷங்கர். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் களத்தில் இறங்கி தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருடன் பேசினாராம். அதன்பின் 'இந்தியன் 3' படத்திற்கான எஞ்சியுள்ள சில நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு எட்டப்பட்டதாம். விரைவில் அது நடக்கலாம் என்கிறார்கள். திட்டமிட்டபடி அப்படி நடந்து முடிந்தால் இந்த ஆண்டிலேயே 'இந்தியன் 3' வெளியாகும் சூழல் வரலாம்.
லைகா நிறுவனம் அடுத்ததாக பத்து படங்கள் வரையில் தயாரிக்கும் முடிவில் உள்ளதாகவும் சொல்கிறார். அவை என்னென்ன என்பதற்கான அறிவிப்புகளும் விரைவில் வர உள்ளது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.