கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியும், வசூலையும் பெற்று புதிய சாதனைகளை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ள இந்த படம் கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு உருவாகி உள்ளது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்சன் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருகிறார். இது குறித்த தகவலை படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மிகச்சிறந்த நாள்.. எனது தந்தையுடன் டப்பிங் பணியில்..” என்று குறிப்பிட்டுள்ளார்.