ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்தார். கதிர் - ஓவியா நடித்த இந்தப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 15 கோடி ரூபாய் வசூல் செய்தது. என்றாலும் அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த படத்தையும் தயாரிக்காத ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது 25வது படத்தை தானே தயாரித்து நடிக்கப் போகிறார். ‛கிங்ஸ்டன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.