ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் | பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் |
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்தார். கதிர் - ஓவியா நடித்த இந்தப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 15 கோடி ரூபாய் வசூல் செய்தது. என்றாலும் அதன் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக எந்த படத்தையும் தயாரிக்காத ஜி.வி.பிரகாஷ், தற்போது தனது 25வது படத்தை தானே தயாரித்து நடிக்கப் போகிறார். ‛கிங்ஸ்டன்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகள் சம்பந்தப்பட்ட தகவல் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.