மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விழுப்புரத்தில் தீவிர ரஜினி ஆதரவாளரான ஜெயராம் என்பவரின் அண்ணாமலை ஓட்டல் திறப்பு விழாவுக்கு, ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணா கலந்து கொண்டார். அப்போது விழுப்புரத்தில் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் வீட்டிற்கு சென்று, அவரது தந்தை பழனிவேல் மற்றும் தாயார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் சத்ய நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரத்தைச் சேர்ந்த நமது வீரமுத்துவேல் ஐஎஸ்ஆர்ஓ இயக்குனராக, குழுவாக செயல்பட்டு சிறப்பாக பணியாற்றி சந்திராயனை நிலவில் இறக்கி சாதித்துள்ளார். அவரது வீட்டுக்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறோம். அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.
ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து ரஜினி லால் சலாம் படத்தில் நடிக்கிறார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ரஜினி இமயமலை செல்லும் போதும், ஆசிரமத்திற்குச் செல்லும் போதும் என பத்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் நண்பராக இருக்கிறார். அவர் யோகி, சன்னியாசி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவதில் தவறு ஏதும் இல்லை. வரும் லோக்சபா தேர்தலில் ரஜினி சார்பில் யாருக்கும் ஆதரவும் இல்லை. இனிமேலும் யாருக்கும் ஆதரவு அளிக்கப் போவதுமில்லை என்றார்.