‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
திறமைகள் பல இருந்தும் அதிகம் பேசப்படாத நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். இசையமைப்பது, பாடுவது, நடிப்பது என அப்பா கமல்ஹாசனைப் போலவே பன்முகத் திறமை கொண்டவர். அவரது திறமையை இந்தியத் திரையுலகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தது.
'சலார்' படத்தின் மூலம் அந்தக் குறை தீரும் என எதிர்பார்க்கலாம். பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வந்த போதே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். பல வருடங்களாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்காத நடிகையாக ஸ்ருதி இருந்ததே அதற்குக் காரணம்.
'சலார்' படத்தில் ஸ்ருதியின் திறமைகளை இயக்குனர் பிரசாந்த் நீல் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்பதற்கு ஒரு உதாரணத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி. ஐந்து மொழிகளில் வெளியாக உள்ள அப்படத்திற்காக அந்த ஐந்து மொழிகளிலும் அவரே சொந்தக் குரலில் டப்பிங் பேசி வருகிறார். மூன்று மொழிகளில் டப்பிங் பேசி முடித்துவிட்டாராம், இன்னும் இரண்டு மொழிகளில் பேச வேண்டுமாம். இந்த ஒரு திறமைக்காகவே ஸ்ருதிக்கு ஒரு தேசிய விருது வழங்கலாம். நோட் பண்ணிக்குங்க ஜுரிஸ்….