டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி |
சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கண்ணப்பாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய பக்தியின் மகிமை குறித்த தகவல்களை சேகரித்து அதனைக்கொண்டு திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தார். அதற்கான வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டார்.
இந்த நிலையில் 24 பிரேம்ஸ் பேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட் செலவில் தனது கனவு திரைப்படமான 'கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை' என்னும் படத்தில் கண்ணப்பா வேடத்தில் நடிக்கிறார் விஷ்ணு மஞ்சு. கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.
பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரிகோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்லி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர். மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே இசையமைக்கின்றனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'மஹாபாரதம்' தொடரை இயக்கிய முகேஷ் சிங் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
இப்படம் குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு கூறுகையில், “மிகுந்த உற்சாகத்துடனும், பெருமிதத்துடனும், எனது நேசத்துக்குரிய படைப்பான 'கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை' படத்தை துவங்கியிருக்கிறேன். இந்த திரைப்படம் தலைசிறந்த படைப்பாகவும், அன்பின் உழைப்பாகவும் பல ஆண்டுகளாக கவனமாக வளர்க்கப்பட்டது. 'கண்ணப்பாவின்' ஆழமான கதை பல தலைமுறைகளாக சினிமா ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம், காலங்காலமாக ஆழ்ந்த பயபக்தியை பெற்றுள்ளது. இந்தப் படம் என்னுடைய அடங்காத ஆர்வத்திற்குச் சான்றாக நிற்கிறது.''என்றார்.