'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மலையாள நடிகர் மம்முட்டியின் வாரிசு துல்கர் சல்மான். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து இந்திய அளவில் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ‛கிங் ஆப் கோதா' படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. இந்த பட புரொமோஷனில் பேசிய துல்கர், ‛‛நான் தற்போது 40 வயதை நெருங்கி வருகிறேன். இனி அடுத்த 10 ஆண்டுகளில் ரொமான்ஸ் ஹீரோவாக நடிக்க முடியாது. அடுத்தக்கட்டத்திற்கு செல்ல நினைக்கிறேன். முதிர்ச்சியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். கிங் ஆப் கோதா படத்தில் ஆக் ஷன் வேடத்தில் நடித்துள்ளேன். இதில் நடிப்பது கடினமானது. அதை சுவாரஸ்யமாக உருவாக்கி உள்ளனர்'' என்றார்.
இவரது தந்தை உட்பட 60 வயதை கடந்த ஹீரோக்களே ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்து வரும் நிலையில் இவரோ அப்படி நடிக்க மாட்டேன் என கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.