எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
கமல்ஹாசன், ஸ்ரீதேவி, தீபா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'மீண்டும் கோகிலா. ஒரு நடுத்தர குடும்பத்து கணவன், மனைவியை விட்டு பிரிந்து ஒரு நடிகையுடன் சுற்றுவதும், பின்னர் தன்னை உணர்ந்து மனைவியுடன் சேர்வதும்தான் கதை, ரொமாண்டிக் காமெடி வகை படம்.
இந்த படத்தை முதலில் இயக்கியது மகேந்திரன். தீபா நடித்த நடிகை கேரக்டரில் நடித்தது பாலிவுட் நடிகை ரேகா. ஆனால் என்ன காரணத்தாலோ 20 சதவிகித படப்பிடிப்பும், ஒரு பாடலும் எடுத்து முடித்த நிலையில் மகேந்திரன் படத்தை விட்டு விலகினார். அதை தொடர்ந்து ரேகாவும் விலகினார். பின்னர் படத்தை இயக்குமாறு ஜி.என்.ரங்கராஜனை கமல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து அவர் இயக்கினார். ரேகாவிற்கு பதில் தீபா நடித்தார்.
படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும், பாடல்களும் ஒரு காரணமாக இருந்தது. சின்னஞ்சிறு வயதில், ராதா ராதா நீ எங்கே, ஹேய் ஓராயிரம், பொன்னான மேனி பாடல்கள் இப்போதும் ரசிகர்களின் மனங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஸ்ரீதேவிக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தது.