அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
1970களில் அறிமுகமாகி 90 வரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில் நடந்த அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தேர்தலில் தோல்வி அடைந்ததால் கட்சி தன்னை புறக்கணிப்பதாகவும், தோற்கடித்ததும் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம்சாட்டி பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதிலிருந்து விலகி தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டில்லியில் உள்ள பா.ஜ.க. மத்திய அலுவலகத்தில் தெலுங்கானா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தருண் சுக், மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து ஜெயசுதா கூறும்போது "பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால தலைமையின்கீழ் நாட்டின் முன்னேற்றம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் என்னை பா.ஜ.க.வில் சேரவைத்தது. மாற்றத்தை விரும்பும் உணர்வாலேயே நான் இந்தக் கட்சியில் இணைந்துள்ளேன். இனிமேல் நான் நடிப்பைவிட அரசியலுக்கே முக்கியத்துவம் அளிப்பேன் " என்றார்.