பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! | வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் |
1970களில் அறிமுகமாகி 90 வரையில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெயசுதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதே தொகுதியில் நடந்த அடுத்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தேர்தலில் தோல்வி அடைந்ததால் கட்சி தன்னை புறக்கணிப்பதாகவும், தோற்கடித்ததும் காங்கிரஸ் கட்சிதான் என்று குற்றம்சாட்டி பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்தும் விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதிலிருந்து விலகி தற்போது பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். டில்லியில் உள்ள பா.ஜ.க. மத்திய அலுவலகத்தில் தெலுங்கானா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் தருண் சுக், மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து ஜெயசுதா கூறும்போது "பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால தலைமையின்கீழ் நாட்டின் முன்னேற்றம் எனக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுதான் என்னை பா.ஜ.க.வில் சேரவைத்தது. மாற்றத்தை விரும்பும் உணர்வாலேயே நான் இந்தக் கட்சியில் இணைந்துள்ளேன். இனிமேல் நான் நடிப்பைவிட அரசியலுக்கே முக்கியத்துவம் அளிப்பேன் " என்றார்.