இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த பேச்சிலர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா பாரதி. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாயாருடன் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்து அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் திவ்யா பாரதி. அதில் புடவை கெட்டப்பில், கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் மங்களகரமாக அவர் நிற்பதை பார்த்த ரசிகர்கள், ஒன்பது லட்சம் லைக்ஸ் மற்றும் அவர் அழகை வர்ணித்து பலவிதமான கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.