புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த பேச்சிலர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா பாரதி. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாயாருடன் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்து அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் திவ்யா பாரதி. அதில் புடவை கெட்டப்பில், கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் மங்களகரமாக அவர் நிற்பதை பார்த்த ரசிகர்கள், ஒன்பது லட்சம் லைக்ஸ் மற்றும் அவர் அழகை வர்ணித்து பலவிதமான கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.