சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த பேச்சிலர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யா பாரதி. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய தாயாருடன் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதையடுத்து கோயிலுக்கு வெளியே வந்து அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் திவ்யா பாரதி. அதில் புடவை கெட்டப்பில், கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் மங்களகரமாக அவர் நிற்பதை பார்த்த ரசிகர்கள், ஒன்பது லட்சம் லைக்ஸ் மற்றும் அவர் அழகை வர்ணித்து பலவிதமான கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.