இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'பேச்சிலர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ள திவ்யபாரதி அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்களைப் பார்க்கும் சீனியர் நடிகைகளுக்குக் கண்டிப்பாக அதிர்ச்சியும், ஆச்சரியமும் இருக்கும். அந்த அளவிற்கு கிளாமரான புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிடுவார் திவ்யா.
தற்போது மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள திவ்யாபாரதி அடுத்தடுத்து பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. விதவிதமான கோணங்களில், விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். அவற்றின் உச்சமாக நேற்று பிகினி உடையில் கடற்கரை மணலில் விளையாடும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றியுள்ளார்.
இப்படியான புகைப்படங்களை ஹாலிவுட், பாலிவுட் நடிகைகள்தான் பதிவிடுவது வழக்கம். அவர்களுக்கு தமிழ் நடிகையான தான் சற்றும் சளைத்தவரல்ல என்று திவ்யபாரதி பதிவிடுகிறாரோ ?. இந்த பிகினி புகைப்படங்களுக்கு சில ரசிகர்கள் கோபமாகவும், கெட்ட வார்த்தையிலும், சில ரசிகர்கள் பாராட்டியும் கமெண்ட் செய்துள்ளார்கள்.