பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி |
நடிகை யாஷிகா ஆனந்த், 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவரது தோழி வள்ளிசெட்டி பவானி (வயது 28). அமெரிக்காவில் தங்கி இருந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை வந்திருந்தார்.
யாஷிகா ஆனந்த், வள்ளிசெட்டி பவானி மற்றும் நண்பர்கள் காரில் மாமல்லபுரம் சென்று விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற திரும்பும்போது அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் வரும்போது கார் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவானி உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கு தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதி விசாரணைக்காக நேற்று யாஷிகா கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு மற்றும் யாஷிகா தரப்பு வழக்கிறஞர்கள் இறுதி வாக்குவாதம் செய்தனர். பின்னர் வழக்கை வருகிற செப்டம்பார் மாதம் 29ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அன்றைய தினம் யாஷிகா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.