300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
கடந்த 2021ம் ஆண்டு நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த், மாமல்லபுரம் அருகே கார் ஓட்டி சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் நெருங்கிய தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் அவரது இரண்டு நண்பர்களும் படுகாயம் அடைந்தார்கள். அதையடுத்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த கார் விபத்து குறித்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா விபத்து குறித்து விசாரணை நடைபெற்ற போது அதுகுறித்த விளக்கங்களை அளித்திருக்கிறார்.