காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணைந்திருக்கும் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் நடைபெற்று வந்தது. அங்கு சிம்பு நடித்த பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் தக் லைப் படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களுக்கு டில்லியில் நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று விட்டதால் ஓரிரு மாதங்கள் தக்லைப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத கமல், இந்த படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளப் போகிறார். அந்த வகையில், டில்லியில் கமல், சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாகிறது. இங்கு படப்பிடிப்பு நடந்து முடிந்த பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் பங்கேற்று நடிக்க இருப்பதாகவும் படகுழு வட்டாரங்களில் கூறுகிறார்கள்.